என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி:
வன்கொடுமை சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றம் சமீபத்தில் ஒரு தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் தாழ்த்தப்பட்டோர் பாதுகாப்பு இயக்கங்கள் சார்பில் போராட்டம் நடந்து வருகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
முதன்மை செயலாளர் தேவபொழிலன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் அமுதவன், தமிழ்மாறன், முன்னவன், பொதினிவளவன், செல்வநந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தி.மு.க. தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., மாணவர் கூட்டமைப்பு சாமிநாதன், திராவிடர் கழகம் வீரமணி, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், கீதநாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
போராட்டத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பாதுகாக்கும் வகையில் அரசியலமைப்பு சட்ட அட்டவணை 9-வது பிரிவை இணைக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர் தேசிய ஆணையம் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டும்.
புதுவை அரசு அமைச்சரவையை கூட்டி தீர்ப்பை திரும்பப்பெற தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசு தீர்ப்பை தடுத்து நிறுத்த மேல்முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்