search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயங்கொண்டம் அருகே பெண்ணிடம் மிரட்டி பணம் பறித்தவர் கைது
    X

    ஜெயங்கொண்டம் அருகே பெண்ணிடம் மிரட்டி பணம் பறித்தவர் கைது

    ஜெயங்கொண்டம் அருகே பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.
    ஆண்டிமடம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்அருகே உள்ள சூசையப்பர் பட்டினத்தை சேர்ந்தவர் சூசைமேரி (43). இவர் ஜெயங்கொண்டம் நகை கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர் பணி முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். 

    அப்போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி சூசைமேரி பையில் வைத்திருந்த பணத்தை பறித்துக் கொண்டு ஓடி விட்டார். 

    இது குறித்து சூசைமேரி ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில்புகார் அளித்தார். புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி வழக்கு பதிந்து விசாரித்ததில் மேலுரை சேர்ந்த பாலமுருகன் (38) என்பது தெரியவந்தது. இது குறித்து பாலமுருகன் மீது வழக்குபதிந்து, கைது செய்து விசாரித்து வருகின்றனர். 
    Next Story
    ×