search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊத்துக்கோட்டை அருகே நிலத்தகராறில் 3 பேருக்கு வெட்டு
    X

    ஊத்துக்கோட்டை அருகே நிலத்தகராறில் 3 பேருக்கு வெட்டு

    ஊத்துக்கோட்டை அருகே நிலத்தகராறில் 3 பேரை வெட்டிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டையை அடுத்த சூளைமேனியை சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சரத்குமாருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது.

    இது தொடர்பாக அவர்களுக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. பின்னர் இது கோஷ்டி மோதலாக மாறியது.

    ஆத்திரம் அடைந்த சரத்குமார் தரப்பினர் கத்தியால் பிரகாஷ், முரளி, செல்லன் ஆகியோரை வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த 3 பேருக்கும் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து குமார் என்பவரை கைது செய்தார். சரத்குமார் உள்பட 3 பேரை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×