search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்புகள் 6 கட்டமாக நடக்கிறது- கலெக்டர் தகவல்
    X

    கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்புகள் 6 கட்டமாக நடக்கிறது- கலெக்டர் தகவல்

    அரியலூர் விளையாட்டரங்கில் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்புகள் 6 கட்டமாக நடக்கிறது என கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்து உள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் அமைத்துள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் கற்று கொள்ளும் திட்டத்தின் கீழ் நீச்சல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. பிரதி திங்கட்கிழமை தவிர அனைத்து நாட்களும் நடத்தப்பட உள்ளது.

    அந்த வகையில், முதல் கட்ட பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் மாதம் 1-ந்தேதி தொடங்கியது. இந்த நீச்சல் பயிற்சியானது 14-ந்தேதி வரை நடக்கிறது. இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் வருகிற 15-ந்தேதி முதல் 28-ந்தேதி வரையிலும், மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்புகள் வருகிற 29-ந்தேதி முதல் அடுத்த மாதம் மே (மாதம்) 12-ந்தேதி வரையிலும், நான்காம் கட்ட பயிற்சி வகுப்புகள் மே மாதம் 13-ந்தேதி முதல் 26-ந்தேதி வரையிலும், ஐந்தாம் கட்ட பயிற்சி வகுப்புகள் மே மாதம் 27-ந்தேதி முதல் ஜூன் மாதம் 9-ந்தேதி வரையிலும், ஆறாம் கட்ட பயிற்சி வகுப்புகள் ஜூன் 10-ந்தேதி முதல் 23-ந்தேதி வரையிலும் காலை 8 மணி முதல் 9 மணி வரையிலும், 9 மணி முதல் 10 மணி வரை மற்றும் மாலை 3 மணி முதல் 4 மணி வரை, 4 மணி முதல் 5 மணி வரை ஆகிய நேரங்களிலும் காலை, மாலை இருவேளையும் 12 நீச்சல் பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த பயிற்சியில் 12 வகுப்புகளில் அடிப்படை நீச்சல் பயிற்சி முழுமையாக கற்றுத்தரப்படும். எனவே கோடை விடுமுறையில் மாணவ, மாணவிகள் அனைவரும் அடிப்படை நீச்சல் பயிற்சி கற்று பயன்பெறவும், நீச்சல் பயிற்சி முழுமையாக கற்றுக்கொள்ளும் மாணவ,மாணவிகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சான்றிதழ் வழங்கப்படும். உடல் திறனை மேம்படுத்தி சிறந்த நீச்சல் வீரர், வீராங்கனைகளாக உருவாகவும், தேசிய, சர்வதேச நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறவும், அரியலூர் மாவட்டத்தை சார்ந்தவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு, அரியலூர் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது ஆக்கி பயிற்றுனரை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 
    Next Story
    ×