என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரம்பலூர் அருகே தனியார் பள்ளி பெண் ஊழியர் எரித்துக்கொலை?
Byமாலை மலர்5 April 2018 1:32 PM GMT (Updated: 5 April 2018 1:32 PM GMT)
பெரம்பலூர் அருகே தனியார் பள்ளி பெண் ஊழியர் வயல்வெளியில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள வெண்கலம் கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி ஜெயந்தி (வயது 50), தனியார் பள்ளியில் உதவியாளராக வேலை செய்து வந்தார். இவருக்கு தன்ராஜ், மோகன்ராஜ் என்ற மகன்கள் உள்ளனர். இருவரும் திருச்சியில் வேலை செய்து வருகின்றனர். ஜெயந்தி மட்டும் தனியாக வசித்து வந்தார்.
இந்தநிலையில் இன்று அதிகாலை ஜெயந்தி அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
ஜெயந்தி எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. யாராவது அவரை கடத்தி சென்று தீ வைத்து எரித்து கொலை செய்தனரா? அல்லது தற்கொலை செய்தாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X