search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலாயுதம்பாளையம் அருகே மணல் கடத்திய 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்
    X

    வேலாயுதம்பாளையம் அருகே மணல் கடத்திய 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்

    வேலாயுதம்பாளையம் அருகே போலீசார் ரோந்து சென்றனர். அப்போது திருட்டுத் தனமாக மணல் கடத்திய 2 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம், தோட்டக்குறிச்சி காவிரி ஆற்றுப்படுகையில் வேலாயுதம் பாளையம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மாட்டு வண்டியில் மணல் அள்ளிக்கொண்டிருந்த புகளுர் ஹைஸ்கூல் மேட்டைச் சேர்ந்த ரவி (45) என்பவரிடம் மணல் அள்ளுவதற்கான அனுமதி சீட்டைக் கேட்டனர். அவர் அனுமதி சீட்டு இன்றி திருட்டுத் தனமாக மணல் அள்ளுவது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து  ரவியை கைது செய்தனர். மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர். 

    அதேபோல் புகளுர் காவிரி ஆற்றுப்படுகையில் அனுமதியின்றி மாட்டுவண்டியில் மணல் அள்ளிக்  கொண்டிருந்த கந்தம் பாளையத்தை சேர்ந்த துரை (50) என்பவரை வேலாயுதம்பாளையம் போலீசார் கைது செய்து மணல் கடத்த பயன் படுத்திய மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர். 
    Next Story
    ×