search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி விவகாரம்- திருவாரூர் ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. தொண்டர் தீக்குளிப்பு
    X

    காவிரி விவகாரம்- திருவாரூர் ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. தொண்டர் தீக்குளிப்பு

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திருவாரூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. தொண்டர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருவாரூர்:

    திருவாரூரில் தி.மு.க. சார்பில் மத்திய- மாநில அரசுகளை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. நகர செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கோ‌ஷமிட்டனர்.

    காலை 11 மணியளவில் திடீரென ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட திருவாரூரை சேர்ந்த தி.மு.க. தொண்டர் மோகன் (வயது 45) என்பவர் திடீரென தான் வைத்திருந்த கேனில் இருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்தார்.

    இதனால் தீ உடல் முழுவதும் பற்றி எரிந்ததால் அங்குமிங்கும் ஓடினார். இதை கண்ட நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே அவர்கள் விரைந்து மோகன் உடலில் எரிந்த தீயை அணைத்தனர். பலத்த தீக்காயம் அடைந்த அவரை மீட்டு உடனடியாக திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் தொண்டர் தீக்குளித்த சம்பவம் திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
    Next Story
    ×