search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிடுவோம்- பி.ஆர்.பாண்டியன்
    X

    ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிடுவோம்- பி.ஆர்.பாண்டியன்

    ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட்டு தடுத்து நிறுத்துவோம் என்று பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
    மன்னார்குடி:

    தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் மன்னார்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் காவிரி உரிமை மீட்புக்கான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் மத்திய அரசு, கர்நாடகாவில் அரசியல் ஆதாயம் தேடுவதற்கான வகையில் நீதிமன்ற தீர்ப்பையே முடக்க பார்க்கிறது. தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றுப்படுவதை பா.ஜனதா கட்சி தடுக்க பார்க்கிறது.

    இதனை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தொடர் போராட்டங்களில் ஈடுபட தி.மு.க., பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. அதனை ஏற்று விவசாயிகள் முழுமையாக அனைத்து போராட்டங்களிலும் ஒன்றுபட்டு களமிறங்க வேண்டும். மேலும் மாணவர்கள், இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு போராட்டம் நடத்தியது போல் அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்க வேண்டும்.


    காவிரி போராட்டத்தில் இளைஞர்கள், மாணவர்கள் ஈடுபடுவதை திசை திருப்பும் உள்நோக்கத்தோடு சென்னை ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த பா.ஜனதா சதி செய்கிறது. இதனை ஒத்திவைக்க வேண்டும்.

    தமிழக அரசு கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளை ஒத்தி வைக்க முன்வர வேண்டும். மறுக்கும் பட்சத்தில் வருகிற 10-ந்தேதி கிரிக்கெட் போட்டி நடக்க உள்ள சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை முற்றுகையிட்டு தடுத்து நிறுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
    Next Story
    ×