என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருவாரூர் அருகே டாஸ்மாக் கடையில் 200 மதுபாட்டில்கள் திருட்டு
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தான் அருகே உள்ள வாட்டார் கடைவீதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு டாஸ்மாக் கடையில் வியாபாரத்தை முடித்துவிட்டு விற்பனையாளர் வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று வழக்கம்போல் கடையை திறக்க வந்த விற்பனையாளர் ஜெயச்சந்திரன் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த சுமார் 200 மதுபாட்டில்கள் திருட்டு போய் இருந்தது. இதன்மதிப்பு ரூ.30 ஆயிரம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து கடை மேலாளர் சற்குணம் திருக்களார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முத்துலெட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில்களை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்