என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சொகுசு காரில் சாராயம் கடத்தல்- பெண் உள்பட 3 பேர் கைது
Byமாலை மலர்4 April 2018 9:34 AM GMT (Updated: 4 April 2018 9:34 AM GMT)
புதுச்சேரியில் இருந்து சீர்காழிக்கு சொகுசு காரில் சாரயம் கடத்தியது தொடர்பாக பெண் உள்பட 3 பேரை கைது செய்த போலீசார் ரூ.85 ஆயிரம் மதிப்புள்ள சாராய கேன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழியில் புதுச்சேரி மாநில சாராயம் எடுத்து செல்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முத் சஞ்சய் சேகருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மதுவிலக்கு தனிபிரிவு டி.எஸ்.பி. சாமிநாதன் தலைமையில் மதுவிலக்கு போலீசார் அதிரடி சோதனையில் இறங்கினர்.
இதைத்தொடர்ந்து மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் பிரேம்ஆனந்த், தனிப்படை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் சீர்காழி பகுதியில் வாகன சோதனையில் ஈடுப்பட்னர்.
அப்போது சீர்காழி அடுத்த வருசபத்து என்ற பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக ஒரு சொகுசு கார் வேகமாக வந்தது. அப்போது போலீசார் அந்த காரை மறித்து சோதனை செய்தனர்.
இதில் அந்த காரில் புதுச்சேரி மாநில சாராயம் 10 கேன்கள் வைக்கப்பட்டு இருந்தது. அதன் மதிப்பு சுமார் ரூ.85 ஆயிரம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இதை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
அப்போது சீர்காழி ஞான சம்பந்தம் தெருவை சேர்ந்த குமார் (வயது 42), மங்கை மடம் பகுதியை சேர்ந்த கண்ணன் (39) ஆகியோர் புதுச்சேரியில் இருந்து சாராய கேன்களை சீர்காழி அடுத்த ஓதவந்தான்குடி பகுதியை சேர்ந்த குணசுந்தரி (36) என்பவர் வீட்டிற்கு எடுத்து செல்வது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் குமார், கண்ணன் மற்றும் குணசுந்தரி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். சாராயம் எடுத்து வந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவம் சீர்காழி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
நாகை மாவட்டம் சீர்காழியில் புதுச்சேரி மாநில சாராயம் எடுத்து செல்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முத் சஞ்சய் சேகருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மதுவிலக்கு தனிபிரிவு டி.எஸ்.பி. சாமிநாதன் தலைமையில் மதுவிலக்கு போலீசார் அதிரடி சோதனையில் இறங்கினர்.
இதைத்தொடர்ந்து மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் பிரேம்ஆனந்த், தனிப்படை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் சீர்காழி பகுதியில் வாகன சோதனையில் ஈடுப்பட்னர்.
அப்போது சீர்காழி அடுத்த வருசபத்து என்ற பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக ஒரு சொகுசு கார் வேகமாக வந்தது. அப்போது போலீசார் அந்த காரை மறித்து சோதனை செய்தனர்.
இதில் அந்த காரில் புதுச்சேரி மாநில சாராயம் 10 கேன்கள் வைக்கப்பட்டு இருந்தது. அதன் மதிப்பு சுமார் ரூ.85 ஆயிரம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இதை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
அப்போது சீர்காழி ஞான சம்பந்தம் தெருவை சேர்ந்த குமார் (வயது 42), மங்கை மடம் பகுதியை சேர்ந்த கண்ணன் (39) ஆகியோர் புதுச்சேரியில் இருந்து சாராய கேன்களை சீர்காழி அடுத்த ஓதவந்தான்குடி பகுதியை சேர்ந்த குணசுந்தரி (36) என்பவர் வீட்டிற்கு எடுத்து செல்வது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் குமார், கண்ணன் மற்றும் குணசுந்தரி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். சாராயம் எடுத்து வந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவம் சீர்காழி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X