search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி அருகே பெண்ணை தாக்கிய 2 பேர் கைது
    X

    தேனி அருகே பெண்ணை தாக்கிய 2 பேர் கைது

    தேனி அருகே பெண்ணை தாக்கிய 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

    தேனி:

    தேனி சுப்பன்தெருவை சேர்ந்தவர் மணிமேகலை (வயது27). இவரது கணவர் ராஜேஷ்கண்ணன் (32). இவர்களுக்கு திருமணமாகி தேனி அரண்மனைபுதூரில் தனிக்குடித்தனம் வசித்து வந்தனர்.

    திருமணமான முதலே இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து மணிமேகலை தனது தந்தை வீட்டிற்கு சென்று விட்டார். இது குறித்து ராஜேஷ்கண்ணன் தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்து தனது மனைவியை தன்னுடன் வாழ அறிவுரை வழங்குமாறு கூறினார். இதையடுத்து போலீசார் மணிமேகலைக்கு ஆலோசனை வழங்கி கணவருடன் சேர்த்து வைத்தனர்.

    இந்நிலையில் சம்பவத் தன்று மணிமேகலையும், ராஜேஷ்கண்ணனும் கோவில் திருவிழாவிற்கு சென்றபோது ராஜேஷ்கண்ணனின் தாய் மாரியம்மாள், உறவினர்கள் பரமேஸ்வரி (35), வீரலட்சுமி (32) ஆகியோர் அங்கு வந்தனர். உறவினர்களுடன் சேர்ந்து ராஜேஷ்கண்ணும் சேர்ந்து தனது மனைவியை ஏன் பிரிந்து சென்றாய் என்று கூறி ஆபாசமாக பேசி கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இது குறித்து மணிகேமலை போலீசில் புகார் செய்ததின் பேரில் பரமேஸ்வரி, வீரலட்சுமியை கைது செய்து ராஜேஷ்கண்னன், அவரது தாய் மாரியம்மாள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×