என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தேனி அருகே பெண்ணை தாக்கிய 2 பேர் கைது
தேனி:
தேனி சுப்பன்தெருவை சேர்ந்தவர் மணிமேகலை (வயது27). இவரது கணவர் ராஜேஷ்கண்ணன் (32). இவர்களுக்கு திருமணமாகி தேனி அரண்மனைபுதூரில் தனிக்குடித்தனம் வசித்து வந்தனர்.
திருமணமான முதலே இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து மணிமேகலை தனது தந்தை வீட்டிற்கு சென்று விட்டார். இது குறித்து ராஜேஷ்கண்ணன் தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்து தனது மனைவியை தன்னுடன் வாழ அறிவுரை வழங்குமாறு கூறினார். இதையடுத்து போலீசார் மணிமேகலைக்கு ஆலோசனை வழங்கி கணவருடன் சேர்த்து வைத்தனர்.
இந்நிலையில் சம்பவத் தன்று மணிமேகலையும், ராஜேஷ்கண்ணனும் கோவில் திருவிழாவிற்கு சென்றபோது ராஜேஷ்கண்ணனின் தாய் மாரியம்மாள், உறவினர்கள் பரமேஸ்வரி (35), வீரலட்சுமி (32) ஆகியோர் அங்கு வந்தனர். உறவினர்களுடன் சேர்ந்து ராஜேஷ்கண்ணும் சேர்ந்து தனது மனைவியை ஏன் பிரிந்து சென்றாய் என்று கூறி ஆபாசமாக பேசி கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து மணிகேமலை போலீசில் புகார் செய்ததின் பேரில் பரமேஸ்வரி, வீரலட்சுமியை கைது செய்து ராஜேஷ்கண்னன், அவரது தாய் மாரியம்மாள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்