search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேதாரண்யத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் கடத்தல்
    X

    வேதாரண்யத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் கடத்தல்

    திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் கடத்தப்பட்டது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா அண்டர்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜகிளி. விவசாயி. இவரது மனைவி அன்புச்செல்வி இவர்களது மகள் பிரதிபா (வயது 21) ஆசிரியர் பட்டயப்படிப்பு இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். பிரதிபாவிற்கும், திருத்துறைப்பூண்டி அடுத்த ஒருவருக்கும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது.

    இந்நிலையில் வாய் மேட்டைச் சேர்ந்த முருகையன் மகன் கார்த்தி என்பவர் பிரதிபாவை கடத்தி சென்று விட்டதாக அன்புச்செல்வி வேதாரண்யம் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்தப்பட்ட பிரதீபாவை தேடிவருகின்றனர். பிரதீபாவும் கார்த்தியும் கடந்த ஓராண்டாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×