search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க. உண்ணாவிரத போராட்டத்தில் இ.பி.எஸ்-ஓ.பி.எஸ். பங்கேற்க வேண்டும்- அய்யாக்கண்ணு
    X

    அ.தி.மு.க. உண்ணாவிரத போராட்டத்தில் இ.பி.எஸ்-ஓ.பி.எஸ். பங்கேற்க வேண்டும்- அய்யாக்கண்ணு

    காவிரி பிரச்சினைக்காக அ.தி.மு.க. உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளது. இந்த போராட்டத்தில் முதல்- அமைச்சர், துணை முதல்வர் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என அய்யாகண்ணு கூறினார். #ayyakannu #edappadipalanisamy #cauveryissue

    புதுக்கோட்டை:

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மரபணு மாற்று விவசாயத்தை தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அதன் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விழிப்புணர்வு நடைபயணம் நடந்து வருகிறது.

    கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பயணம் இன்று 32-வது நாளை எட்டியுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டு வருகிறது. இன்று புதுக்கோட்டை வருகை தந்த விவசாயிகள் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    அப்போது தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

    மரபணு விவசாயத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே அதை தடை செய்ய வேண்டும் என்று கன்னியாக்குமரி முதல் சென்னை வரை விழிப்புணர்வு பிரசாரத்தை செய்து வருகிறோம்.

    உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறிய பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். மேலும் மத்திய அரசை கண்டித்து வரும் 3-ந்தேதி திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிடும் போராட்டமும் விமானத்தை மறிக்கும் போராட்டமும் நடைபெறும்.


    காவிரி பிரச்சினைக்காக அ.தி.மு.க. உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளது வரவேற்கதக்கதாக இருந்தாலும் போராட்டத்தில் முதல்- அமைச்சர், துணை முதல்வர் கட்டாயம் பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews #ayyakannu #edappadipalanisamy #cauveryissue

    Next Story
    ×