என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செட்டிக்குளத்தில் புதிய கட்டிடங்கள்- தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
Byமாலை மலர்30 March 2018 2:11 PM GMT (Updated: 30 March 2018 2:11 PM GMT)
செட்டிக்குளத்தில் ரூ. 9 லட்சம் மதிப்புள்ள புதிய கட்டிடத்தை தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிக்குளம் மலை அடிவாரத்தில் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.3 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்குடையை பெரம்பலூர் சட்ட மன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இந்த பயணியர் நிழற்குடையை திறந்ததின் மூலம் செட்டிக்குளம் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று தெரிவித்தார். அதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள செட்டிக்குளம் மகளிர் சுகாதார வளாகத்தினை திறந்து வைத்து பார்வையிட்டார். அங்கு இருந்த பெண்களிடம் இந்த சுகாதார வளாகத்தினை சரியான முறையில் பயன் படுத்தி கொள்ளுமாறும் அதனை தூய்மையாக வைத்து கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் ஆலத்தூர் ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் கர்ணன், செட்டிக்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சசிகுமார், நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X