என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பஸ் பயணியிடம் பணம் திருடிய 2 பெண்கள் கைது
Byமாலை மலர்28 March 2018 5:17 PM GMT (Updated: 28 March 2018 5:17 PM GMT)
பெரம்பலூர் அருகே பஸ் பயணியிடம் பணம் திருடிய 2 பெண்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகேயுள்ள பேரளி கிராமத்தை சேர்ந்தவர் முருகேஸ்வரி (வயது 34). நேற்று இவர், பேரளியில் இருந்து தனியார் பஸ் மூலம் பெரம்பலூரை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது நான்குரோடு பகுதியில் பஸ்சிலிருந்து இறங்கிய முருகேஸ்வரி தனது பர்சினை பார்த்த போது, அதிலிருந்த ரூ.32 ஆயிரம் திருட்டு போனது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த முருகேஸ்வரி பின்னர் சுதாரித்து கொண்டு உடனடியாக ஷேர் ஆட்டோ பிடித்து அங்கிருந்து பெரம்பலூர் புதிய பஸ்நிலையத்துக்கு விரைந்து வந்தார். பின்னர், தான் பயணம் செய்த அந்த தனியார் பஸ்சுக்குள் ஏறிய அவர் தனது பக்கத்தில் அமர்ந்திருந்த 2 பெண்களிடம் பணம் காணாமல் போனது பற்றி விசாரித்தார்.
இதற்கிடையே அந்த பெண்கள் அங்கிருந்து தப்பியோட முயற்சித்தனர். பொதுமக்கள் உதவியுடன் அவர்களை முருகேஸ்வரி பிடித்து விசாரித்த போது, பணத்தை அவர்கள் தான் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பெண்கள் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் விசாரணையில் அவர்கள், சேலம் மாவட்டம் கொண்டாலம்பட்டி மலையடிவாரம் பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவரின் மனைவிகள் அனிதா (24) மற்றும் திவ்யா (23) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி வழக்குப்பதிவு செய்து அனிதா, திவ்யாவை கைது செய்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X