search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சின்னமனூர் அருகே முன்விரோதத்தில் பெண்ணை தாக்கிய கணவன்-மனைவி மீது வழக்கு
    X

    சின்னமனூர் அருகே முன்விரோதத்தில் பெண்ணை தாக்கிய கணவன்-மனைவி மீது வழக்கு

    சின்னமனூர் அருகே முன்விரோதத்தில் பெண்ணை தாக்கிய கணவன்-மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தேனி:

    சின்னமனூர் அருகே உள்ள கன்னியம்பட்டியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி ஒச்சம்மாள் (வயது52). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தேவராஜ் மனைவி இந்திராணிக்கும் இட பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.

    சம்பவத்தன்று தேவராஜ், இந்திராணி ஆகியோர் ஒச்சம்மாள் வீட்டு முன்பு நின்று அவரை ஆபாசமாக பேசினர். இதனை தட்டிகேட்ட ஒச்சம்மாளை, இந்திராணி மண்வெட்டியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் தேவராஜிம் கடுமையாக தாக்கி உள்ளார்.

    இது குறித்து ஒச்சம்மாள் சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் தேவராஜ், இந்திராணி மீது வழக்குப்பதிவு செய்துள் ளனர்.

    இதேபோல இந்திராணி கொடுத்த புகாரின் பேரில் ஒச்சம்மாள், லட்சுமி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

    Next Story
    ×