என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கும்பகோணத்தில் எரித்து கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? போலீசார் விசாரணை
கும்பகோணம்:
கும்பகோணம் மேலக் காவிரி குயவன் தெருவில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு கட்டிடத்தின் உள்ளே ஒரு வாலிபர் எரித்து கொலை செய்யப்பட்டு கிடப்பது நேற்று தெரியவந்தது. அவரது உடல் அருகில் பாதியளவு பெட்ரோலுடன் ஒரு பாட்டில் கிடந்தது.
கொலை செய்யப்பட்ட வாலிபர் உடல் கருகிய நிலையில் இருந்ததால் அவர் யார்? என்பது தெரியவில்லை. இதுபற்றி அப்பகுதி மக்கள் கும்பகோணம் கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொலையுண்ட வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுபபி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்ட வாலிபர் எந்த ஊரை சேர்ந்தவர் ? அவரை எரித்து கொலை செய்தது யார்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுகுடிக்கும் போது ஏற்பட்ட தகாறில் அவரை நண்பர்கள் தீர்த்து கட்டினார்களா? அல்லது அந்த வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்னும் கொலையுண்ட வாலிபர் யார்? என்பது தெரியவில்லை.எனவே அந்த பகுதியில் வாலிபர் யாரும் மாயமானார்களா? என்பது தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வாலிபர் எரித்து கொலை செய்யப்படட சம்பவம் கும்பகோணத்தில் பரபரப்பை ஏற்படுதி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்