search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    என் மீதான வழக்குகளை சட்டரீதியாக சந்தித்து வெற்றி பெறுவேன் - கார்த்தி சிதம்பரம்
    X

    என் மீதான வழக்குகளை சட்டரீதியாக சந்தித்து வெற்றி பெறுவேன் - கார்த்தி சிதம்பரம்

    என் மீதான வழக்குகளை சட்டரீதியாக சந்தித்து வெற்றி பெறுவேன் என்று சென்னை திரும்பிய கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.#Kartichidambaram

    ஆலந்தூர்:

    ஐ.என்.எஸ். மீடியா நிறுவனம் தொடர்பான வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி ஐகோர்ட்டு பல்வேறு நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கியது.

    அதை தொடர்ந்து நேற்று இரவு 10.40 மணியளவில் விமானம் மூலம் கார்த்தி சிதம்பரம் சென்னை திரும்பினார். அவருக்கு தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    “என் மீது அரசியல் ரீதியில் பொய்யான குற்றச்சாட்டுகளுடன் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அதற்கு டெல்லி ஐகோர்ட்டின் தீர்ப்பு பதிலாக அமைந்துள்ளது. தீர்ப்பின் 50-வது பக்கத்தில் அது தெளிவாக கூறப்பட்டுள்ளது.

    என் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை சட்டரீதியான முறையில் சந்தித்து உறுதியாக வெற்றி பெறுவேன். என் மீதான நடவடிக்கை அரசியல் ரீதியிலானது என நடுநிலையாக இருக்கும் அனைவருக்கும் தெரியும்.”

    இவ்வாறு அவர் கூறினார். #Kartichidambaram #tamilnews

    Next Story
    ×