search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி மாவட்டத்தில் பரவலாக மழை- விவசாயிகள் மகிழ்ச்சி
    X

    தேனி மாவட்டத்தில் பரவலாக மழை- விவசாயிகள் மகிழ்ச்சி

    தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    கூடலூர்:

    கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் பருவ மழை போதிய அளவு பெய்யாததால் கடந்த 4 ஆண்டுகளாகவே ஒரு போக நெல்சாகுபடி மட்டும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் மழை குறைந்த அளவே பெய்ததால் அணைகளின் நீர் மட்டம் உயராமலேயே இருந்தது.

    அவ்வப்போது சாரல் மழை மட்டும் பெய்து வருகிறது. பகல் பொழுதில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனிடையே நேற்று திடீரென தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிச்சியடைந்தனர்.

    தற்போது மானாவாரி பயிரிடும் நிலங்களை உழுது தயார்படுத்தி வருகின்றனர். இதற்கு இந்த மழை ஏதுவாக இருக்கும் என்பதால் விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    பெரியாறு அணையின் நீர் மட்டம் 113.35 அடியாக உள்ளது. 31 கன அடி நீர் வருகிறது. 225 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. வைகை அணை நீர் மட்டம் 32.32 அடியாக உள்ளது. 86 கன அடி நீர் வருகிறது. 60 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. மஞ்சளாறு அணை நீர் மட்டம் 31.95 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணை நீர் மட்டம் 73.47 அடியாக உள்ளது. வரத்து 1 கன அடி. 3 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

    Next Story
    ×