என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தேனி மாவட்டத்தில் பரவலாக மழை- விவசாயிகள் மகிழ்ச்சி
கூடலூர்:
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் பருவ மழை போதிய அளவு பெய்யாததால் கடந்த 4 ஆண்டுகளாகவே ஒரு போக நெல்சாகுபடி மட்டும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் மழை குறைந்த அளவே பெய்ததால் அணைகளின் நீர் மட்டம் உயராமலேயே இருந்தது.
அவ்வப்போது சாரல் மழை மட்டும் பெய்து வருகிறது. பகல் பொழுதில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனிடையே நேற்று திடீரென தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிச்சியடைந்தனர்.
தற்போது மானாவாரி பயிரிடும் நிலங்களை உழுது தயார்படுத்தி வருகின்றனர். இதற்கு இந்த மழை ஏதுவாக இருக்கும் என்பதால் விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பெரியாறு அணையின் நீர் மட்டம் 113.35 அடியாக உள்ளது. 31 கன அடி நீர் வருகிறது. 225 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. வைகை அணை நீர் மட்டம் 32.32 அடியாக உள்ளது. 86 கன அடி நீர் வருகிறது. 60 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. மஞ்சளாறு அணை நீர் மட்டம் 31.95 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணை நீர் மட்டம் 73.47 அடியாக உள்ளது. வரத்து 1 கன அடி. 3 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்