search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெருங்குடி சாலையில் திடீர் பள்ளம்
    X

    பெருங்குடி சாலையில் திடீர் பள்ளம்

    பெருங்குடி சுங்கச்சாவடி சிக்னல் அருகே சாலையின் நடுவில் இன்று காலை திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதை பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    சோழிங்கநல்லூர்:

    பழைய மகாபலிபுரம் சாலையில் (ஓ.எம்.ஆர்.) பெருங்குடி சுங்கச்சாவடி சிக்னல் அருகே சாலையின் நடுவில் இன்று காலை “திடீர்” பள்ளம் ஏற்பட்டது. இதை பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த துரைப்பாக்கம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    இரு சக்கர வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகாமல் பள்ளம் விழுந்த இடத்தில் தடுப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

    இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது சாலையின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள சென்னை மெட்ரோ குடிநீர் பைப் உடைந்துள்ளது தெரிய வந்தது.

    பின்னர் பள்ளத்தை மணல் நிரப்பி மூடினார்கள். பள்ளம் மணல் கொட்டி மூடப்பட்டாலும் அப்பகுதியில் சாலையின் நடுவில் பேரிகாட் அமைக்கப்பட்டிருப்பதால் ஓ.எம்.ஆர். சாலையில் மிதமான வேகத்தில் போக்குவரத்து பாதிப்புடன் வாகனங்கள் சென்று வருகின்றன.

    Next Story
    ×