என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருப்பத்தூர்-மானாமதுரையில் 2 பெண்கள் மாயம்
சிவகங்கை:
திருப்பத்தூர் நகர் வசந்தநகரைச் சேர்ந்தவர் சாந்தி (வயது 47). இவர் சம்பவத்தன்று வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து அவரது சகோதரர் பார்த்திபன் திருப்பத்தூர் நகர் போலீ சில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கீதா வழக்குப்பதிவு செய்து சாந்தியை தேடி வருகிறார்.
மானாமதுரை தாலுகா இடைக்காட்டூர் கீழத் தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகள் காவ்யா. 8-ம் வகுப்புவரை படித்துள்ள இவர், வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்து வந்தார்.
சில நாட்களுக்கு முன்பு தோழி வீட்டுக்கு சென்று வருவதாக காவ்யா வீட்டில் கூறிவிட்டு சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதட்டம் அடைந்த பெற்றோர் மகளை பல் வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் பலனில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில் மானாமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது பரக்கத்துல்லா வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்