search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பத்தூர்-மானாமதுரையில் 2 பெண்கள் மாயம்
    X

    திருப்பத்தூர்-மானாமதுரையில் 2 பெண்கள் மாயம்

    திருப்பத்தூர் மற்றும் மானாமதுரையில் 2 பெண்கள் மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் 2 பெண்களை தேடி வருகிறார்கள்.

    சிவகங்கை:

    திருப்பத்தூர் நகர் வசந்தநகரைச் சேர்ந்தவர் சாந்தி (வயது 47). இவர் சம்பவத்தன்று வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து அவரது சகோதரர் பார்த்திபன் திருப்பத்தூர் நகர் போலீ சில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கீதா வழக்குப்பதிவு செய்து சாந்தியை தேடி வருகிறார்.

    மானாமதுரை தாலுகா இடைக்காட்டூர் கீழத் தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகள் காவ்யா. 8-ம் வகுப்புவரை படித்துள்ள இவர், வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்து வந்தார்.

    சில நாட்களுக்கு முன்பு தோழி வீட்டுக்கு சென்று வருவதாக காவ்யா வீட்டில் கூறிவிட்டு சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதட்டம் அடைந்த பெற்றோர் மகளை பல் வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் பலனில்லை. 

    இதுகுறித்த புகாரின் பேரில் மானாமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது பரக்கத்துல்லா வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகிறார்.

    Next Story
    ×