என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோட்டக்குப்பத்தில் பேரி கார்டில் பஸ் மோதல்- 4 பெண்கள் காயம்
Byமாலை மலர்22 March 2018 4:40 PM GMT (Updated: 22 March 2018 4:40 PM GMT)
கோட்டக்குப்பத்தில் இன்று காலை பேரி கார்டில் தனியார் பஸ் மோதியதால் கண்ணாடி நொறுங்கி விழுந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த 4 பெண்கள் காயம் அடைந்தனர்.
சேதராப்பட்டு:
புதுவையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு தனியார் பஸ் கனகசெட்டிகுளத்துக்கு இன்று காலை புறப்பட்டு வந்தது. புதுவையை அடுத்த கோட்டக்குப்பம் ரவுண்டானா அருகே அந்த பஸ் வந்த போது முன்னாள் சென்ற தமிழகஅரசு பஸ்சை முந்தி செல்ல முயன்றது. அப்போது சாலையின் இடது புறத்தில் இருந்த பேரிகார்டில் தனியார் பஸ் மோதியது.
மோதிய வேகத்தில் பேரிகார்டை பஸ் இழுத்து சென்றது. இந்த அதிர்ச்சியில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி நொறுங்கியது. இதனால் பஸ்சின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த பொம்மையார்பாளையத்தை சேர்ந்த செல்வகுமாரி (வயது34) உள்பட 4 பெண்களுக்கு சீராய்ப்பு காயம் ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து பஸ் டிரைவர் விமலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X