என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிவகங்கை மாவட்டத்துக்கு ரூ. 6,931 கோடி கடன் வழங்க இலக்கு- கலெக்டர் லதா
Byமாலை மலர்21 March 2018 9:56 AM GMT (Updated: 21 March 2018 9:56 AM GMT)
2018-19-ம் நிதியாண்டில் சிவகங்கை மாவட்டத்துக்கு ரூ. 6,931 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் லதா தெரிவித்துள்ளார்.
சிவகங்கை:
நபார்டு வங்கியின் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் 2018-2019-ஆம் நிதி ஆண்டிற்கு முன்னுரிமைக் கடன் திட்ட அறிக்கை கையேடு வெளியிடும் நிகழ்ச்சி கலெக்டர் லதா தலைமையில் நடந்தது.
நிகழ்ச்சியில் விவசாயம் மற்றும் விவசாயம் சாராத் தொழில்கள் மேற்கொள்வதற்கு வங்கிகள் மூலம் முன்னுரிமைக்கடன் வழங்குவதற்காக திட்ட மதிப்பீட்டு கையேட்டினை கலெக்டர் வெளியிட்டு பேசியதாவது:-
மாவட்டத்திலுள்ள அனைத்துப் பகுதிகளிலும் விவசாயம், விவசாயம் சார்ந்த துணைத்தொழில்கள் மற்றும் விவசாயம் சாராத் தொழில்களுக்கான முன்னுரிமைக்கடன் வழங்குவதற்கு மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு நபார்டு வங்கியின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் 2018-19-ம் ஆண்டிற்கான திட்ட அறிக்கையின் மூலம் அனைத்து தரப்பு மக்கள் மற்றும் புதிதாக தொழில் தொடங்க ஆர்வமுள்ள படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் 2018-19-ம் நிதியாண்டிற்கு வேளாண்மைப் பயிர்க்கடன் வழங்குவதற்கு ரூ.1,951 கோடிக்கு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. விவசாய உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்வதற்கு ரூ.567 கோடியும், விவசாயம் சார்ந்த துணைத்தொழில்கள் மேற்கொள்வதற்கு ரூ.272 கோடியும் ஆக மொத்தம் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு ரூ.3,401 கோடி வழங்குவதற்கு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் மேற்கொள்வதற்கு ரூ.590 கோடியும், ஏற்றுமதி தொழில் செய்வதற்கு ரூ.64 கோடியும், கல்விக்கடன் வழங்குவதற்கு ரூ.563 கோடியும், வீட்டு வசதி கடன் வழங்குவதற்கு ரூ.653 கோடியும், சூரியசக்திப் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் சூரியசக்தி உற்பத்திச் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு ரூ.8.74 கோடியும், பெண்கள் சுயஉதவிக் குழுக்கள், கூட்டுப் பொறுப்புக் குழுக்கள் மற்றும் பிரதமரின் ஜன் தன் மற்றும் பல்வேறு காப்பீடு திட்டங்கள் மேற்கொள்வதற்கு ரூ.705 கோடியும் மற்றும் இதர சமூக கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவதற்கு ரூ.105 கோடியும் ஆக மொத்தம் சிவகங்கை மாவட்டத்தில் ரூ.6,931 கோடி அளவிலான முன்னுரிமைக்கடன் வங்கிகள் மூலம் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முருகேசன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதன்மை மண்டல மேலாளர் ருக்மணி லட்சுமணன் மற்றும் அனைத்து வங்கிகளின் மேலாளர்கள், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர், மகளிர் திட்டம் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். #Tamilnews
நபார்டு வங்கியின் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் 2018-2019-ஆம் நிதி ஆண்டிற்கு முன்னுரிமைக் கடன் திட்ட அறிக்கை கையேடு வெளியிடும் நிகழ்ச்சி கலெக்டர் லதா தலைமையில் நடந்தது.
நிகழ்ச்சியில் விவசாயம் மற்றும் விவசாயம் சாராத் தொழில்கள் மேற்கொள்வதற்கு வங்கிகள் மூலம் முன்னுரிமைக்கடன் வழங்குவதற்காக திட்ட மதிப்பீட்டு கையேட்டினை கலெக்டர் வெளியிட்டு பேசியதாவது:-
மாவட்டத்திலுள்ள அனைத்துப் பகுதிகளிலும் விவசாயம், விவசாயம் சார்ந்த துணைத்தொழில்கள் மற்றும் விவசாயம் சாராத் தொழில்களுக்கான முன்னுரிமைக்கடன் வழங்குவதற்கு மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு நபார்டு வங்கியின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் 2018-19-ம் ஆண்டிற்கான திட்ட அறிக்கையின் மூலம் அனைத்து தரப்பு மக்கள் மற்றும் புதிதாக தொழில் தொடங்க ஆர்வமுள்ள படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் 2018-19-ம் நிதியாண்டிற்கு வேளாண்மைப் பயிர்க்கடன் வழங்குவதற்கு ரூ.1,951 கோடிக்கு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. விவசாய உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்வதற்கு ரூ.567 கோடியும், விவசாயம் சார்ந்த துணைத்தொழில்கள் மேற்கொள்வதற்கு ரூ.272 கோடியும் ஆக மொத்தம் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு ரூ.3,401 கோடி வழங்குவதற்கு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் மேற்கொள்வதற்கு ரூ.590 கோடியும், ஏற்றுமதி தொழில் செய்வதற்கு ரூ.64 கோடியும், கல்விக்கடன் வழங்குவதற்கு ரூ.563 கோடியும், வீட்டு வசதி கடன் வழங்குவதற்கு ரூ.653 கோடியும், சூரியசக்திப் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் சூரியசக்தி உற்பத்திச் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு ரூ.8.74 கோடியும், பெண்கள் சுயஉதவிக் குழுக்கள், கூட்டுப் பொறுப்புக் குழுக்கள் மற்றும் பிரதமரின் ஜன் தன் மற்றும் பல்வேறு காப்பீடு திட்டங்கள் மேற்கொள்வதற்கு ரூ.705 கோடியும் மற்றும் இதர சமூக கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவதற்கு ரூ.105 கோடியும் ஆக மொத்தம் சிவகங்கை மாவட்டத்தில் ரூ.6,931 கோடி அளவிலான முன்னுரிமைக்கடன் வங்கிகள் மூலம் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முருகேசன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதன்மை மண்டல மேலாளர் ருக்மணி லட்சுமணன் மற்றும் அனைத்து வங்கிகளின் மேலாளர்கள், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர், மகளிர் திட்டம் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X