என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கண்டமங்கலம் அருகே 9-ம் வகுப்பு மாணவி மிரட்டி கற்பழிப்பு- டிரைவர் கைது
Byமாலை மலர்21 March 2018 7:37 AM GMT (Updated: 21 March 2018 7:37 AM GMT)
கண்டமங்கலம் அருகே 9-ம் வகுப்பு மாணவியை மிரட்டி கற்பழித்த வழக்கில் தலைமறைவாக இருந்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கண்டமங்கலம்:
புதுச்சேரி மாநிலம் திருக்கனூரை அடுத்த குமாரபாளையத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 45) டிரைவர். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
குமாரபாளையம் அருகே உள்ள மணலிப்பட்டை சேர்ந்தவர் அமுதா (40). இவருக்கு திருமணமாகி விட்டது. அமுதாவுக்கும் டிரைவர் அய்யப்பனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது. அவர்கள் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.
இந்த விவரம் அமுதாவின் கணவருக்கு தெரிய வந்தது. அவர் மனைவியை கண்டித்தார். ஆனால் அவர் தொடர்ந்து கள்ளக்காதலனுடன் சந்தித்து வந்தார். இதனை தொடர்ந்து அமுதாவை விட்டு அவரது கணவர் பிரிந்து சென்று விட்டார்.
இந்த நிலையில் அய்யப்பனும் அமுதாவும் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள சித்தலம்பட்டு கிராமத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு கணவன்-மனைவியாக குடும்பம் நடத்தி வந்தனர். அந்த வீட்டில் அமுதாவின் அக்காள் மகள் 14 வயதான பெண்ணும் வசித்து வந்தார். அவள் புதுவையில் உள்ள கொடத்தூர் அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அந்த பெண் பள்ளி வளாகத்தில் திடீரென்று மயங்கி விழுந்தார். உடனே பள்ளி ஆசிரியர்கள் அவளை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவள் 4 மாத கர்ப்பிணியாக இருப்பதாக கூறினர். இதுதொடர்பாக மாணவியிடம் விசாரித்த போது சித்தி வீட்டில் தங்கி இருந்த போது டிரைவர் அய்யப்பன் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் நான் கர்ப்பம் அடைந்து விட்டேன் என்று கூறினாள்.
இந்த சம்பவம் தொடர்பாக கண்டமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். மாணவியை கற்பழித்து கர்ப்பிணியாக்கிய டிரைவர் அய்யப்பனை தேடிவந்தார். போலீசார் தேடுவதை அறிந்ததும் அவர் தலைமறைவாகி விட்டார்.
நேற்று இரவு அய்யப்பனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர்.
கற்பழிக்கப்பட்ட மாணவி புதுவையில் உள்ள அரியாங்குப்பம் அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
மாணவியை மிரட்டி கற்பழிக்கப்பட்ட சம்பவம் கண்டமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #Tamilnews
புதுச்சேரி மாநிலம் திருக்கனூரை அடுத்த குமாரபாளையத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 45) டிரைவர். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
குமாரபாளையம் அருகே உள்ள மணலிப்பட்டை சேர்ந்தவர் அமுதா (40). இவருக்கு திருமணமாகி விட்டது. அமுதாவுக்கும் டிரைவர் அய்யப்பனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது. அவர்கள் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.
இந்த விவரம் அமுதாவின் கணவருக்கு தெரிய வந்தது. அவர் மனைவியை கண்டித்தார். ஆனால் அவர் தொடர்ந்து கள்ளக்காதலனுடன் சந்தித்து வந்தார். இதனை தொடர்ந்து அமுதாவை விட்டு அவரது கணவர் பிரிந்து சென்று விட்டார்.
இந்த நிலையில் அய்யப்பனும் அமுதாவும் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள சித்தலம்பட்டு கிராமத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு கணவன்-மனைவியாக குடும்பம் நடத்தி வந்தனர். அந்த வீட்டில் அமுதாவின் அக்காள் மகள் 14 வயதான பெண்ணும் வசித்து வந்தார். அவள் புதுவையில் உள்ள கொடத்தூர் அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அந்த பெண் பள்ளி வளாகத்தில் திடீரென்று மயங்கி விழுந்தார். உடனே பள்ளி ஆசிரியர்கள் அவளை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவள் 4 மாத கர்ப்பிணியாக இருப்பதாக கூறினர். இதுதொடர்பாக மாணவியிடம் விசாரித்த போது சித்தி வீட்டில் தங்கி இருந்த போது டிரைவர் அய்யப்பன் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் நான் கர்ப்பம் அடைந்து விட்டேன் என்று கூறினாள்.
இந்த சம்பவம் தொடர்பாக கண்டமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். மாணவியை கற்பழித்து கர்ப்பிணியாக்கிய டிரைவர் அய்யப்பனை தேடிவந்தார். போலீசார் தேடுவதை அறிந்ததும் அவர் தலைமறைவாகி விட்டார்.
நேற்று இரவு அய்யப்பனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர்.
கற்பழிக்கப்பட்ட மாணவி புதுவையில் உள்ள அரியாங்குப்பம் அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
மாணவியை மிரட்டி கற்பழிக்கப்பட்ட சம்பவம் கண்டமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X