என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரியார் சிலை உடைப்பு - மு.க.ஸ்டாலின் கண்டனம்
Byமாலை மலர்20 March 2018 8:50 AM GMT (Updated: 20 March 2018 8:50 AM GMT)
புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்துக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை:
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
செங்கோட்டைக்குள் ரதயாத்திரை நுழையும் நாளில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தந்தை பெரியார் சிலை தகர்க்கப்பட்டிருப்பது திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டதாகவே தெரிகிறது.
தந்தை பெரியார் சிலையின் தலையைத் தகர்த்தவர்கள் மீது அ.தி.மு.க. அரசு உறுதியான-கடுமையான நடவடிக்கையை காலதாமதமின்றி எடுக்க வேண்டும். உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்வதுடன், இத்தகைய வன்முறைச் செயல்களைத் தூண்டிவிடும் கூட்டத்தையும் குண்டர் சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும். அதனை வலியுறுத்தி, தி.மு.கழகம் தொடர்ச்சியானப் போராட்டங்களை முன்னெடுக்கத் தயாராகி விட்டது.
பெரியார் சிலை மீது கை வைக்க நினைக்கும் கோழைகளை தி.மு.க.வினர் விரட்டி அடிப்பார்கள். அந்தக் கோழைகளைத் தூண்டிவிடும் மதவெறி சக்திகளை தமிழ்நாட்டை விட்டே துரத்தியடிப்பார்கள் என எச்சரிக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார். #tamilnews
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
செங்கோட்டைக்குள் ரதயாத்திரை நுழையும் நாளில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தந்தை பெரியார் சிலை தகர்க்கப்பட்டிருப்பது திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டதாகவே தெரிகிறது.
தந்தை பெரியார் சிலையின் தலையைத் தகர்த்தவர்கள் மீது அ.தி.மு.க. அரசு உறுதியான-கடுமையான நடவடிக்கையை காலதாமதமின்றி எடுக்க வேண்டும். உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்வதுடன், இத்தகைய வன்முறைச் செயல்களைத் தூண்டிவிடும் கூட்டத்தையும் குண்டர் சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும். அதனை வலியுறுத்தி, தி.மு.கழகம் தொடர்ச்சியானப் போராட்டங்களை முன்னெடுக்கத் தயாராகி விட்டது.
பெரியார் சிலை மீது கை வைக்க நினைக்கும் கோழைகளை தி.மு.க.வினர் விரட்டி அடிப்பார்கள். அந்தக் கோழைகளைத் தூண்டிவிடும் மதவெறி சக்திகளை தமிழ்நாட்டை விட்டே துரத்தியடிப்பார்கள் என எச்சரிக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X