என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாதவரம் - சோழிங்கநல்லூர் மெட்ரோ ரெயில் திட்டத்தில் மேலும் 8 ரெயில் நிலையங்கள் இணைப்பு
Byமாலை மலர்20 March 2018 6:16 AM GMT (Updated: 20 March 2018 6:16 AM GMT)
மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையேயான மெட்ரோ ரெயில் திட்டத்தில் மேலும் 8 ரெயில் நிலையங்கள் இணைக்கப்படுகிறது. இனிமேல் ஐ.டி.பூங்காவுக்கு பயணிகள் எளிதில் செல்ல முடியும்.
சென்னை:
சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்பட்டது.
கோயம்பேடு - ஆலந்தூர், சின்னமலை - விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம் - நேரு பூங்கா சுரங்க பாதையிலும் மெட்ரோ ரெயில் போக்குவரத்து சேவை நடைபெற்று வருகிறது. பயணிகள் வரவேற்பை தொடர்ந்து சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரெயில் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
சென்ட்ரல் - எழும்பூரில் இருந்து விரைவில் விமான நிலையத்துக்கு மெட்ரோ ரெயில் சேவை நடைபெற உள்ளது. பயணிகள் எளிதில் விமான நிலையம் சென்றடைய முடியும். இதனால் மெட்ரோ ரெயில் சேவை பயணிகளுக்கு மேலும் உதவிகரமாக அமைய இருக்கிறது.
இந்த நிலையில் 2-வது கட்டமாக மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையே ஐ.டி.பூங்கா பகுதிகளை இணைக்கும் விதமாக மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்பட இருக்கிறது. இதற்கான பணிகளில் மெட்ரோ ரெயில் திட்ட அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
மாதவரம் - சோழிங்க நல்லூர் இடையேயான மெட்ரோ ரெயில் திட்டத்தில் மேலும் 8 ரெயில் நிலையங்கள் இணைக்கப்பட இருக்கிறது.
மாதவரம் - சோழிங்க நல்லூர், கீழ்ப்பாக்கம், ஆயிரம் விளக்கு, மயிலாப்பூர், கோயம்பேடு, ஆலந்தூர், மவுண்ட் உள்ளிட்ட ரெயில் நிலையங்கள் மேலும் இணைக்கப்பட உள்ளது. இதனால் ஐ.டி.பூங்கா பகுதிக்கு பயணிகளால் எளிதில் செல்ல முடியும்.
இந்த திட்டத்தில் முதல் வழித்தட பாதை, 2-வது வழித்தட பாதைகள் இணைக்கப்படுவதால் பயணிகள் பெரிதும் பயன்பெற உள்ளனர். ஐ.டி.பூங்கா பகுதிக்கு பயணிகள் செல்லும் போது குறைந்த நேரத்தில் விரைவாக செல்ல முடியும். இந்த திட்டப்பணிகள் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது.
சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்பட்டது.
கோயம்பேடு - ஆலந்தூர், சின்னமலை - விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம் - நேரு பூங்கா சுரங்க பாதையிலும் மெட்ரோ ரெயில் போக்குவரத்து சேவை நடைபெற்று வருகிறது. பயணிகள் வரவேற்பை தொடர்ந்து சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரெயில் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
சென்ட்ரல் - எழும்பூரில் இருந்து விரைவில் விமான நிலையத்துக்கு மெட்ரோ ரெயில் சேவை நடைபெற உள்ளது. பயணிகள் எளிதில் விமான நிலையம் சென்றடைய முடியும். இதனால் மெட்ரோ ரெயில் சேவை பயணிகளுக்கு மேலும் உதவிகரமாக அமைய இருக்கிறது.
இந்த நிலையில் 2-வது கட்டமாக மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையே ஐ.டி.பூங்கா பகுதிகளை இணைக்கும் விதமாக மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்பட இருக்கிறது. இதற்கான பணிகளில் மெட்ரோ ரெயில் திட்ட அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
மாதவரம் - சோழிங்க நல்லூர் இடையேயான மெட்ரோ ரெயில் திட்டத்தில் மேலும் 8 ரெயில் நிலையங்கள் இணைக்கப்பட இருக்கிறது.
மாதவரம் - சோழிங்க நல்லூர், கீழ்ப்பாக்கம், ஆயிரம் விளக்கு, மயிலாப்பூர், கோயம்பேடு, ஆலந்தூர், மவுண்ட் உள்ளிட்ட ரெயில் நிலையங்கள் மேலும் இணைக்கப்பட உள்ளது. இதனால் ஐ.டி.பூங்கா பகுதிக்கு பயணிகளால் எளிதில் செல்ல முடியும்.
இந்த திட்டத்தில் முதல் வழித்தட பாதை, 2-வது வழித்தட பாதைகள் இணைக்கப்படுவதால் பயணிகள் பெரிதும் பயன்பெற உள்ளனர். ஐ.டி.பூங்கா பகுதிக்கு பயணிகள் செல்லும் போது குறைந்த நேரத்தில் விரைவாக செல்ல முடியும். இந்த திட்டப்பணிகள் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X