search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரூர் அருகே சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை- தொழிலாளி கைது
    X

    கரூர் அருகே சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை- தொழிலாளி கைது

    கரூர் அருகே 5 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

    கரூர்:

    கரூர் மாவட்டம் மேல மாயனூர் இந்திராகாலனியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 41), தொழிலாளி. இவர் அப்பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமியிடம், நைசாக பேச்சு கொடுத்து மிட்டாய் வாங்கி தருவதாக கூறியுள்ளார்.

    இதையடுத்து அந்த சிறுமியை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்ற முத்துச்சாமி, மறைவான இடத்திற்கு சென்று சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த சிறுமியை வீட்டில் விட்டு விட்டு சென்று விட்டார்.

    இந்தநிலையில் இந்த சம்பவத்தை அறிந்த சிறுமியின் தாயார், மாயனூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் முத்துச்சாமி மீது , குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் முத்துசாமிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×