என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு
Byமாலை மலர்15 March 2018 11:28 AM GMT (Updated: 15 March 2018 11:28 AM GMT)
தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த கண்ணன், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதையடுத்து, பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. #KuranganiForestFire
மதுரை:
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைக்கு சென்னை மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த 39 பேர் மலையேற்ற பயிற்சிக்கு சென்றனர். அப்போது அங்கு ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர்.
மதுரை மற்றும் கோவை ஆஸ்பத்திரிகளில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அடுத் தடுத்து 3 பேர் உயிரிழந்த நிலையில் சாவு எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே, குரங்கணி காட்டுத்தீ விபத்தில் 12 பேரை அழைத்துச் சென்ற ஈரோட்டைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கவுந்தம்பாடியை சேர்ந்த கண்ணன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, காட்டுத்தீயில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. #KuranganiForestFire #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X