search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு
    X

    குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு

    தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த கண்ணன், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதையடுத்து, பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. #KuranganiForestFire
    மதுரை:

    தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைக்கு சென்னை மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த 39 பேர் மலையேற்ற பயிற்சிக்கு சென்றனர். அப்போது அங்கு ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர்.

    மதுரை மற்றும் கோவை ஆஸ்பத்திரிகளில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அடுத் தடுத்து 3 பேர் உயிரிழந்த நிலையில் சாவு எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

    இதற்கிடையே, குரங்கணி காட்டுத்தீ விபத்தில் 12 பேரை அழைத்துச் சென்ற ஈரோட்டைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கவுந்தம்பாடியை சேர்ந்த கண்ணன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, காட்டுத்தீயில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. #KuranganiForestFire #Tamilnews
    Next Story
    ×