என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேலத்தில் இளம்பெண் கடத்தல் - 6 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்14 March 2018 12:15 PM GMT (Updated: 14 March 2018 12:15 PM GMT)
சேலம் மாவட்டத்தில் இளம் பெண்ணை கடத்தி சென்ற 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம்:
சேலம், அம்மாப்பேட்டை வித்யாமந்திர் கிருஷ்ணாநகர், 7-வது கிராஸ் பகுதியில் வசித்து வரும் 17 வயது மதிக்கதக்க இளம்பெண் ஒருவர் சம்பவத்தன்று செல்போனுக்கு ரீசார்ஜ் செய்து விட்டு வருவதாக தனது சகோதரியிடம் கூறி விட்டு சென்றார். ரீசார்ஜ் செய்ய சென்ற அவர் பின்னர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.
இந்த சம்பவம் குறித்து அவரது சகோதரி அம்மாப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், எனது தங்கை வலசையூரில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். பின்னர் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு எனது வீட்டில் தங்கியிருந்தார்.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த கண்ணன் அவரது மனைவி லட்சுமி, இவர்களது மகன் உள்பட 6 பேர் சேர்ந்து ஆசை வார்த்தை கூறி எனது தங்கையை கடத்தி சென்று விட்டனர் என புகாரில் கூறியிருந்தார். அதன் பேரில் கண்ணன் மற்றும் அவரது மனைவி உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம், அம்மாப்பேட்டை வித்யாமந்திர் கிருஷ்ணாநகர், 7-வது கிராஸ் பகுதியில் வசித்து வரும் 17 வயது மதிக்கதக்க இளம்பெண் ஒருவர் சம்பவத்தன்று செல்போனுக்கு ரீசார்ஜ் செய்து விட்டு வருவதாக தனது சகோதரியிடம் கூறி விட்டு சென்றார். ரீசார்ஜ் செய்ய சென்ற அவர் பின்னர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.
இந்த சம்பவம் குறித்து அவரது சகோதரி அம்மாப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், எனது தங்கை வலசையூரில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். பின்னர் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு எனது வீட்டில் தங்கியிருந்தார்.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த கண்ணன் அவரது மனைவி லட்சுமி, இவர்களது மகன் உள்பட 6 பேர் சேர்ந்து ஆசை வார்த்தை கூறி எனது தங்கையை கடத்தி சென்று விட்டனர் என புகாரில் கூறியிருந்தார். அதன் பேரில் கண்ணன் மற்றும் அவரது மனைவி உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X