search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவகாசியில் மினி பஸ் உரிமையாளர் சங்க ஆண்டு விழா- ராஜேந்திரபாலாஜி பங்கேற்பு
    X

    சிவகாசியில் மினி பஸ் உரிமையாளர் சங்க ஆண்டு விழா- ராஜேந்திரபாலாஜி பங்கேற்பு

    விருதுநகர் மாவட்ட மினிபஸ் உரிமையாளர் சங்கத்தின் 18-ம் ஆண்டு தொடக்க விழா சிவகாசியில் நடைபெற்றது. இதில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பேசினார்.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்ட மினிபஸ் உரிமையாளர் சங்கத்தின் 18-ம் ஆண்டு தொடக்க விழா சிவகாசியில் நடைபெற்றது. சங்க தலைவர் சண்முகையா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, ராதாகிருஷ்ணன் எம்.பி., சந்திரபிரபா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினர்.

    போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தின் போது பொதுமக்களுக்கு மினி பஸ்கள் பெரிதும் உதவியாக இருந்தன.

    மினி பஸ் உரிமையாளர்களுக்கு அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்று அமைச்சர் பேசினார்.

    கூட்டத்தில் சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், விருது நகர் ஆர்.டிஓ.க்கள், அதிமுக மாவட்ட பொருளாளார் ராஜவர்மன், சிவகாசி நகர செயலாளர் அசன் பதூரூதீன், திருத்தங்கல் நகர செயலாளர் பொன் சக்திவேல், விருதுநகர் இலக்கிய அணி ஒன்றிய செயலாளர் மச்சராஜா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பிலிப்வாசு, வெம்பக் கோட்டை ஒன்றிய செயலாளர் ராம ராஜ், பேரவை இணைச் செயலாளர் எதிர்கோட்டை மணிகண்டன், மினி பஸ் உரிமையாளர் சங்க நிர்வா கிகள் லட்சுமணக் குமார், சதீஸ்குமார், ஜெயக்குமார், மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews

    Next Story
    ×