என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தொண்டையில் இட்லி சிக்கி தொழிலாளி உயிரிழப்பு
Byமாலை மலர்6 March 2018 9:38 AM GMT (Updated: 6 March 2018 9:38 AM GMT)
புதுவை திருக்கனூர் அருகே தொண்டையில் இட்லி சிக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை திருக்கனூர் அருகே கொ.மணவெளி புதுநகரை சேர்ந்தவர் அழகு சீலன் (வயது 38). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகவில்லை.
மது குடிக்கும் பழக்கம் உள்ள அழகுசீலன் நேற்று புதுவை மேட்டுப் பாளையத்தில் உள்ள சாராய கடைக்கு சாராயம் குடிக்க வந்தார். சாராயம் குடித்து விட்டு அங்குள்ள சால்னா கடையில் இட்லி வாங்கி சாப்பிட்டார்.
அப்போது அழகு சீலன் தொண்டையில் இட்சி சிக்கி கொண்டது. விழி பிதுங்கி மூச்சு திணறிய அவருக்கு அருகில் இருந்தவர்கள் தண்ணீர் கொடுத்தனர். ஆனால், சிறிது நேரத்தில் அழகு சீலன் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது தம்பி வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
புதுவை திருக்கனூர் அருகே கொ.மணவெளி புதுநகரை சேர்ந்தவர் அழகு சீலன் (வயது 38). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகவில்லை.
மது குடிக்கும் பழக்கம் உள்ள அழகுசீலன் நேற்று புதுவை மேட்டுப் பாளையத்தில் உள்ள சாராய கடைக்கு சாராயம் குடிக்க வந்தார். சாராயம் குடித்து விட்டு அங்குள்ள சால்னா கடையில் இட்லி வாங்கி சாப்பிட்டார்.
அப்போது அழகு சீலன் தொண்டையில் இட்சி சிக்கி கொண்டது. விழி பிதுங்கி மூச்சு திணறிய அவருக்கு அருகில் இருந்தவர்கள் தண்ணீர் கொடுத்தனர். ஆனால், சிறிது நேரத்தில் அழகு சீலன் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது தம்பி வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X