என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வில்லியனூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சுமை தூக்கும் தொழிலாளி பலி
சேதராப்பட்டு:
வில்லியனூர் அருகே தமிழக பகுதியான பெரம்பை ரோட்டில் இன்று அதிகாலை ஒரு வாலிபர் உடலில் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்ததும் கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த வாலிபர் பிச்சைவீரன்பேட் பகுதியை சேர்ந்த ஞானவேலு மகன் திருஞானம் (வயது36) சுமை தூக்கும் தொழிலாளியான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் மதுகுடிக்கும் பழக்கம் உள்ள திருஞானம் இன்று அதிகாலை அருகில் உள்ள சாராய கடைக்கு சென்று சாராயம் குடித்துவிட்டு திரும்பும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் திருஞானத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து திருஞானம் மீது மோதிய வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்