search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூங்கி கொண்டிருந்த கணவர் மீது கொதிக்கும் நீரை ஊற்றிய மனைவி கைது
    X

    தூங்கி கொண்டிருந்த கணவர் மீது கொதிக்கும் நீரை ஊற்றிய மனைவி கைது

    திருத்துறைப்பூண்டியில் தூங்கி கொண்டிருந்த கணவர் மீது மனைவி கொதிக்கும் நீரை ஊற்றிய சம்பவம் குறித்து மனைவி போலீசார் கைது செய்தனர்.
    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆரியலூரை சேர்ந்தவர் அம்பேத்கர் (வயது 42). இவர் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ரமணி. இவர்களுக்கு தேவிகா (5) என்ற மகள் உள்ளார்.

    இந்த நிலையில் அம்பேத்கர் தினமும் மது குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்தார். சம்பவத்தன்றும் வழக்கம் போல் குடித்து விட்டு மனைவி ரமணியிடம் வாக்குவாதம் செய்து தகராறு செய்தார்.

    இதையடுத்து அம்பேத்கர் தூங்க சென்றார். கணவர் குடித்து விட்டு தொடர்ந்து வீட்டில் சண்டை போட்டு வந்ததால் ரமணி ஆத்திரத்தில் இருந்தார். இதனால் வீட்டில் தூங்கி கொண்டிருந்த அம்பேத்கர் மீது கொதிக்கும் நீரை ஊற்றினார். அப்போது அம்பேத்கர் சத்தம் போட்டு அலறினார். இதில் முகம், தலை ஆகிய பகுதிகளில் வெந்து படுகாயம் ஏற்பட்டது.

    உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்த சம்பவம் பற்றி அம்பேத்கர், திருத்துறைப்பூண்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரமணியை கைது செய்தனர். #tamilnews
    Next Story
    ×