search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் 28-ந்தேதி பா.ம.க. பொதுக்குழு கூட்டம்- ஜி.கே.மணி அறிவிப்பு
    X

    சென்னையில் 28-ந்தேதி பா.ம.க. பொதுக்குழு கூட்டம்- ஜி.கே.மணி அறிவிப்பு

    பா.ம.க. பொதுக்குழுக் கூட்டம் வருகிற 28-2-2018 காலை 10 மணிக்கு வேலப்பன்சாவடியில் உள்ள ஸ்ரீகஜலட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெறும் என்று ஜி.கே.மணி அறிவித்துள்ளார். #pmk #gkmani
    சென்னை:

    பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பா.ம.க. மாநில நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்குழுக் கூட்டம் 28-2-2018 அன்று நடைபெறும் என்றும், அதற்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மதுரையில் நடைபெற்ற பா.ம.க. சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி பா.ம.க. பொதுக்குழுக் கூட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நாளான 28-2-2018 புதன்கிழமை காலை 10 மணிக்கு சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை வேலப்பன்சாவடியில் உள்ள ஸ்ரீகஜலட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெறும்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் இப்பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சித் தலைவர் ஜி.கே.மணி தலைமையேற்கிறார். கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

    தமிழ்நாடு முழுவதும் உள்ள பா.ம.க.வின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், பா.ம.க.வின் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்துகொள்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #tamilnews #pmk #gkmani
    Next Story
    ×