என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வடரங்கம் வேணுகோபாலசாமி கோவில் சீரமைக்கப்படுமா?- பக்தர்கள் எதிர்பார்ப்பு
சீர்காழி:
நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே, வடரங்கம் கிராமத்தில், கொள்ளிடம் ஆற்றின் கரையையொட்டி, வேணு கோபாலசாமி கோவில் உள்ளது.
இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்ததும், சோழர் காலத்தை சேர்ந்ததாகக் கூறப்படுகிறது. இக்கோவில் கோபுரத்தை சேர்ந்த, மற்றக் கட்டிடங்களும், கோயில் மற்றும் தெருவுடன், கடந்த 1925-ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கரையையொட்டி கோபுரம் மட்டுமே உள்ளது. இன்றுவரை எந்த பாதிப்பும் இல்லாமல் அப்படியே உள்ள இந்த கோபுரத்தின் உள்ளே, வேணுகோபால்சாமி நின்ற நிலையில் உள்ளார். ஆனால் இந்த கோபுரம் பூட்டியே கிடக்கிறது. சீமைகருவேல மரங்களும் கோபுரத்தை சூழ்ந்துள்ளது. சோழர்காலக் கட்டிடக் கலையைத் தாங்கி கம்பீரமாக நின்று கொண்டிருக்கும்.
இந்த கோபுரத்தை புணரமைத்து பாதுகாக்க வேண்டும் என்று பக்தர்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கை நிறைவேற்றப்படுமா? என்று பக்தர்கள் எதிர்பார்க்கிறார்கள். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்