என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருத்துறைப்பூண்டியில் ஆட்டோ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்22 Feb 2018 4:49 PM GMT (Updated: 22 Feb 2018 4:49 PM GMT)
திருத்துறைப்பூண்டியில் சி.ஐ.டி.யூ. ஆட்டோ தொழிற் சங்க கொட்டகை அகற்றப்பட்டதை கண்டித்து ஆட்டோ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டியில் சமீபத்தில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதில் திருத்துறைப்பூண்டி பழைய பஸ் நிலையத்தில் உள்ள சி.ஐ.டி.யூ. ஆட்டோ தொழிற் சங்க கொட்டகையும் அகற்றப்பட்டது. இதை கண்டித்து சி.ஐ.டி.யூ. ஆட்டோ தொழிற் சங்கம் சார்பில் காமராஜ் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்டோ தொழிற் சங்க நகர தலைவர் பவுன்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முருகையன், மாவட்ட துணைத்தலைவர் பழனிவேல், மாவட்ட பொருளாளர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் ஹனிபா, நகர செயலாளர் சரவணன், முன்னாள் மாவட்ட தலைவர் செல்வம் மற்றும் சாலையோர வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X