என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
புதுவை அரவிந்தர் ஆசிரமத்துக்கு தாயுடன் வந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை
புதுச்சேரி:
குஜராத்தை சேர்ந்தவர் நிலேஷ் கன்னாரா. தனியார் நிறுவன ஊழியர். இவரது மகன் போயாஷா (வயது 19). எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்துள்ளார்.
இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்தார். அந்த பெண்ணையே திருமணம் செய்து வைக்கும்படி பெற்றோரை வற்புறுத்தி வந்தார்.
ஆனால், பெற்றோர் அந்த பெண்ணை ஏற்க மறுத்து விட்டனர். இதனால் போயாஷா சோகத்துடன் இருந்து வந்தார்.
இதையடுத்து போயாஷாவின் மனநிலையை மாற்ற அவரது தாய் ரித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுவை அரவிந்தர் ஆசிரமத்துக்கு அழைத்து வந்தார்.
அவர்கள் சுய்ப்ரேன் வீதியில் உள்ள ஆசிரமத்துக்கு சொந்தமான விடுதியில் தங்கி இருந்தனர். நேற்று ரித்து அரவிந்தர் ஆசிரமத்துக்கு சென்றார். விடுதி அறையில் போயாஷா மட்டும் இருந்தார்.
ஆசிரமத்துக்கு சென்று விட்டு ரித்து விடுதி அறைக்கு வந்த போது, அங்கு மகன் மின் விசிறியில் தூக்குபோட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அங்குள்ள ஊழியர்கள் உதவியுடன் போயாஷாவை தூக்கில் இருந்து மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் போயாஷா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் பெரியக்கடை போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர்கள் வெற்றிவேல், முருகன், உதவி சப்-இன்ஸ் பெக்டர் பஞ்சநாதன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்