என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சாமிநாதனுக்கு அரசியல் நாகரீகம் இல்லை- காங்கிரஸ் கண்டனம்
புதுச்சேரி:
முத்தியால்பேட்டை வட்டார காங்கிரஸ் முன்னாள் தலைவர் கலிய பெருமாள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரசியல் வாழ்வில் தடம் பதித்தவர்கள் சாதாரண தொண்டனாக இருந்து பல்வேறு மக்கள் போராட்டங்கள், கட்சி பணிகள் ஆற்றி படிப் படியாக உயர்ந்து உயர் பதவிகள் பெற்று அதில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ளனர்.
இவ்வாறு அரசியல் பணிக்கு வருபவர்கள் நெளிவு சுளிவுகளை கற்று எந்த சூழ்நிலையிலும் நாகரீகத்துடன் நடந்து கொள்வார்கள்.
முதற்கட்ட தலைவர்கள் இருக்கும்போது கொல்லைப்புறமாக பா.ஜ.க.வின் தலைவர் பதவியை பிடித்த சாமிநாதன் தனது அநாகரீக பேச்சால் அரசியலுக்கு தகுதி பெறாதவர் என்பதை வெளிக்காட்டி உள்ளார்.
சாமிநாதன் அரசியலில் கட்சி தலைவர் பதவியை மட்டுமல்லாது, நியமன எம்.எல்.ஏ. பொறுப்பையும் கொல்லைப்புறமாக பெற்று வந்ததால்தான் சட்டசபைக்குள் அவரால் அடியெடுத்து வைக்க இன்றளவும் இயலவில்லை.
சாமிநாதனின் பேச்சால் அவர் இன்னும் அரசியலில் பாலர் பருவத்தை தாண்ட வில்லை என்பதை ஒப்புக் கொள்கிறார்.
எதையாவது பேச வேண்டும், எப்படி வேண்டு மானாலும் பேசலாம் என்றால் சாமிநாதன், திரைப்படத்துக்கு கதை எழுதி கதாசிரியர் ஆகலாமே தவிர, அரசியலில் நுழைவது சரியாக இருக்காது. அதுவும் தியாக பின்னணியில் உள்ள காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களை அவதூறாக பேசுவது கண்டனத்துக்குரியது.
முதல்-அமைச்சரும், எங்கள் கட்சியின் ஆணி வேருமாகிய நாராயணசாமி, கட்சி, தொகுதி, ஜாதி பேதம் பாராமல் புதுவையில் உள்ள ஒட்டு மொத்த மக்களுக்காகவும் போராடி திட்டங்களை செயல்படுத்தி வருவதை சற்று கூர்ந்து கவனித்தாவது சாமிநாதன் தன்னை மாற்றிக்கொள்ள முன்வர வேண்டும். சாமிநாதன் பகிரங்க மன்னிப்பு கேட்டு தனது தவறை சரி செய்ய முன்வர வேண்டும்.
இவ்வாறு கலியபெருமாள் கூறியுள்ளார். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்