search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சிபுரத்தில் ஆன்-லைன் பத்திர பதிவை கண்டித்து ஆர்ப்பாட்டம்
    X

    காஞ்சிபுரத்தில் ஆன்-லைன் பத்திர பதிவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

    ஆன்லைன் பத்திர பதிவு முறையை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு பத்திரம்-நகல் எழுதுவோர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சீபுரம் தாலுக்கா அலுவலகம் எதிரில் நடந்தது.
    காஞ்சிபுரம்:

    ஆன்லைன் பத்திர பதிவு முறையை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு பத்திரம்-நகல் எழுதுவோர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகம் எதிரில் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் ந.சிதம்பரநாதன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் எஸ்.ஆர்.கோவிந்தராஜன் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் காஞ்சிபுரம் சார்-பதிவகங்கள், வாலாஜாபாத், தாமஸ் உள்பட பல்வேறு சார்- பதிகவங்களில் உள்ள நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் பத்திரபதிவு துறையில் ஆன்லைன் பதிவு முறை மட்டுமே என்ற நடைமுறையை கண்டித்தும், தற்போதுள்ள முறைப்படி ஆவணப்பதிவு முறையை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டியும் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டது. #Tamilnews
    Next Story
    ×