என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மார்ச் 5, 6 மற்றும் 7-ம் தேதிகளில் கலெக்டர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாடு
Byமாலை மலர்20 Feb 2018 12:48 PM GMT (Updated: 20 Feb 2018 12:48 PM GMT)
சென்னையில் வரும் மார்ச் 5, 6 மற்றும் 7-ம் தேதிகளில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு நடக்க உள்ளது.
சென்னை:
ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை உயரதிகாரிகள் மாநாடு முதல்வர் தலைமையில் நடைபெறும். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த மாநாடு நடைபெறவில்லை. இந்நிலையில், அடுத்த மாதம் மார்ச் 5,6,7 தேதிகளில் 3 நாட்கள் கலெக்டர்கள் - காவல்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்க உள்ள இந்த மாநாடு தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துவது, மற்றும் சட்டம் - ஒழுங்கு குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
5-ம் தேதி கலெக்டர்கள், ஐ.பி.எஸ் அதிகாரிகளின் ஒருங்கிணைந்த கூட்டமும், மறுநாள் (6-ம் தேதி) கலெக்டர்கள் கூட்டமும், (7-ம் தேதி) காவல்துறை உயர் அதிகாரிகளின் கூட்டமும் நடக்கிறது. #TamilNews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X