search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மார்ச் 5, 6 மற்றும் 7-ம் தேதிகளில் கலெக்டர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாடு
    X

    மார்ச் 5, 6 மற்றும் 7-ம் தேதிகளில் கலெக்டர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாடு

    சென்னையில் வரும் மார்ச் 5, 6 மற்றும் 7-ம் தேதிகளில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு நடக்க உள்ளது.
    சென்னை:

    ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை உயரதிகாரிகள் மாநாடு முதல்வர் தலைமையில் நடைபெறும். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த மாநாடு நடைபெறவில்லை. இந்நிலையில், அடுத்த மாதம் மார்ச் 5,6,7  தேதிகளில் 3 நாட்கள் கலெக்டர்கள் - காவல்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்க உள்ள இந்த மாநாடு தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துவது, மற்றும் சட்டம் - ஒழுங்கு குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

    5-ம் தேதி கலெக்டர்கள், ஐ.பி.எஸ் அதிகாரிகளின் ஒருங்கிணைந்த கூட்டமும், மறுநாள் (6-ம் தேதி) கலெக்டர்கள் கூட்டமும், (7-ம் தேதி) காவல்துறை உயர் அதிகாரிகளின் கூட்டமும் நடக்கிறது. #TamilNews
    Next Story
    ×