search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமங்கலம் அருகே மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது
    X

    திருமங்கலம் அருகே மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது

    மனைவியை கத்தியால் குத்திய தே.மு.தி.க. முன்னாள் கவுன்சிலர் கைது செய்யப்பட்டார்.

    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள செங்குளத்தைச் சேர்ந்தவர் பாண்டி. தே.மு. தி.க. முன்னாள் கவுன்சிலர். இவரது மனைவி சுந்தரி (வயது 32).

    கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் ஆத்திரம் அடைந்த பாண்டி கத்தியால் சுந்தரியை குத்தியதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

    காயம் அடைந்த சுந்தரி சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். திருமங்கலம் நகர் போலீசார் விசாரணை நடத்தி பாண்டியை கைது செய்தனர். #tamilnews

    Next Story
    ×