என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெயலலிதா முழு உருவ சிலை சென்னை கொண்டுவரப்பட்டது
Byமாலை மலர்17 Feb 2018 7:52 AM GMT (Updated: 17 Feb 2018 7:52 AM GMT)
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் வைப்பதற்காக ஜெயலலிதா முழு உருவ சிலை சென்னை கொண்டுவரப்பட்டது.
சென்னை:
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் ஜெயலலிதா சிலை வைக்கப்படுகிறது. ஜெயலலிதாவின் பிறந்த நாளான வருகிற 24-ந்தேதி சிலையை திறக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
ஜெயலலிதா சிலை நிறுவும் பணி சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. எம்.ஜி.ஆர் சிலை அருகே ஜெயலலிதா சிலை வைக்கப்படுகிறது. ஒரே பீடத்தில் 2 சிலைகளும் வைக்கப்பட உள்ளன.
இதற்காக எம்.ஜி.ஆர் சிலை அருகே பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது. தற்போது பீடம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
இதற்கிடையே தலைமை கழகத்தில் வைப்பதற்காக ஜெயலலிதா சிலை தயாராகி விட்டது. ஆந்திர மாநிலம் குண்டூரில் இந்த சிலை வடிவமைக்கும் பணிகள் நடந்தன. முழு உருவ வெண்கல சிலையாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஜெயலலிதா சிலை சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவு வேன் மூலம் சிலை அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு கொண்டுவரப்பட்டது. இது பாதுகாப்பாக அ.தி.மு.க. அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. 21-ந்தேதி அந்த சிலையை பீடத்தில் நிலைநிறுத்தி நிறுவ உள்ளனர். ஜெயலலிதா பிறந்த நாளான வருகிற 24-ந்தேதி சிலை திறக்கப்படுகிறது. #tamilnews
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் ஜெயலலிதா சிலை வைக்கப்படுகிறது. ஜெயலலிதாவின் பிறந்த நாளான வருகிற 24-ந்தேதி சிலையை திறக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
ஜெயலலிதா சிலை நிறுவும் பணி சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. எம்.ஜி.ஆர் சிலை அருகே ஜெயலலிதா சிலை வைக்கப்படுகிறது. ஒரே பீடத்தில் 2 சிலைகளும் வைக்கப்பட உள்ளன.
இதற்காக எம்.ஜி.ஆர் சிலை அருகே பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது. தற்போது பீடம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
இதற்கிடையே தலைமை கழகத்தில் வைப்பதற்காக ஜெயலலிதா சிலை தயாராகி விட்டது. ஆந்திர மாநிலம் குண்டூரில் இந்த சிலை வடிவமைக்கும் பணிகள் நடந்தன. முழு உருவ வெண்கல சிலையாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஜெயலலிதா சிலை சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவு வேன் மூலம் சிலை அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு கொண்டுவரப்பட்டது. இது பாதுகாப்பாக அ.தி.மு.க. அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. 21-ந்தேதி அந்த சிலையை பீடத்தில் நிலைநிறுத்தி நிறுவ உள்ளனர். ஜெயலலிதா பிறந்த நாளான வருகிற 24-ந்தேதி சிலை திறக்கப்படுகிறது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X