search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா மரண விசாரணை: சசிகலா உதவியாளர் கார்த்திகேயன் ஆஜரானார்
    X

    ஜெயலலிதா மரண விசாரணை: சசிகலா உதவியாளர் கார்த்திகேயன் ஆஜரானார்

    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலா உதவியாளர் கார்த்திகேயன் இன்று ஆஜராகி விளக்கம் அளித்தார். #JayalalithaDeath
    சென்னை:

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் பற்றி ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

    விசாரணை ஆணையம் அனுப்பும் சம்மன் அடிப்படையில் இதுவரை 30-க்கும் மேற்பட்டவர்கள் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.



    இந்நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலா உதவியாளர் கார்த்திகேயன் இன்று ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது அவர் நீதிபதி ஆறுமுகசாமி கேட்ட கேள்விகளுக்கு உரிய விளக்கங்களுடன் பதில் அளித்தார்.

    ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் நேற்றுடன் சேர்த்து அரசு டாக்டர் பாலாஜி இதுவரை 3-முறை விசாரணை ஆணையத்தில் ஆஜராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #JayalalithaDeath #tamilnews
    Next Story
    ×