என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கிருமாம்பாக்கத்தில் மீனவர் தூக்குபோட்டு தற்கொலை
பாகூர்:
கிருமாம்பாக்கம் நரம்பை சுனாமி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 57). மீனவர். இவரது மனைவி கிருஷ்ணவேணி.
இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ஆறுமுகத்துக்கு குடிப்பழக்கம் உள்ளதால் தினமும் மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார்.
தகராறு அதிகமாகவே கிருஷ்ணவேணி கணவர் ஆறுமுகத்தை திட்டினார். இதில், ஆறுமுகம் மன முடைந்த நிலையில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் ஆறுமுகம் நேற்று மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் அவரை காணாமல் அக்கம் பக்கத்தில் தேடி வந்த நிலையில் அவர் பழைய வீட்டில் தூக்கில் தொங்கினார்.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆறுமுகத்தை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஆறுமுகம் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
இதுகுறித்து அவரது மகன் கிருமாம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்