search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காதலர் தினம் கொண்டாட்டம் - மெரினா, பூங்காவில் குவிந்த காதலர்கள்
    X

    காதலர் தினம் கொண்டாட்டம் - மெரினா, பூங்காவில் குவிந்த காதலர்கள்

    காதலர் தினத்தையொட்டி மெரினா கடற்கரை மற்றும் பூங்காக்களில் இன்று காதலர்கள் ஏராளமானோர் குவிந்தனர். ரோஜாப்பூக்கள், பரிசு பொருட்கள் வழங்கி காதலர்கள் அன்பை பரிமாறினார்கள். #valentineday
    சென்னை:

    உலகம் முழுவதும் பிப்ரவரி 14-ந்தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் இன்று மெரினா பீச், எலிய்ட்ஸ் கடற்கரை, கிண்டி பூங்கா மற்றும் பல்வேறு பூங்காக்களில் இன்று காலை முதலே பைக், கார்களில் வந்து காதலர்கள் திரண்டனர்.

    புத்தாடைகள் அணிந்து வந்த காதல் ஜோடிகள் தங்களது அன்பை வெளிப்படுத்த காதல் பரிசுகள், ரோஜா பூக்கள் வழங்கி பரிமாறிக் கொண்டனர். இனிப்புகள், சாக்லேட்டுகள் காதலிக்கு வழங்கினார்கள். காதல் ஜோடிகள் உச்சக்கட்ட அன்பை வெளிப்படுத்தும் விதமாக கட்டிப்பிடித்து முத்தமிட்டுக் கொண்டனர்.

    ஒருசில ஜோடிகள் விலை உயர்ந்த பரிசு பொருட்களை காதல் பரிசாக வழங்கி அன்பை வெளிப்படுத்தினார்கள்.

    காதலன் தனது காதலிக்கு பிடித்தமான வண்ண மயமான ஆடை அணிந்தும், காதலி தனது காதலனுக்கு பிடித்தமான விலை உயர்ந்த சேலை, சுடிதார் அணிந்தும் வந்தனர்.

    இதனால் மெரினா கடற்கரை மற்றும் பூங்காக்கள் காதல் ஜோடிகளால் நிரம்பி காணப்பட்டது. காதலர்கள் கொஞ்சிகுலாவி காதல் மொழி பேசி மகிழ்ந்து காணப்பட்டனர்.

    சென்னை மாநகர சாலைகளில் மோட்டார்சைக்கிள்களில் காதல் ஜோடிகள் கட்டிப் பிடித்துக் கொண்டு உல்லாச பயணம் செய்து சுற்றி வலம் வந்தனர். ஒருசில ஜோடிகள் மகாபலிபுரம் கடற்கரை நோக்கி மோட்டார் சைக்கிளில் உல்லாச சவாரி புறப்பட்டனர்.



    சினிமா தியேட்டர்களிலும் காதல் ஜோடிகள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. சினிமா தியேட்டர்களிலும் காதல் ஜோடிகள் ரோஜாப் பூக்கள் வழங்கி தங்களது அன்பை பரிமாறிக் கொண்டனர்.

    ஒட்டு மொத்தமாக இன்று சென்னை மாநகரம் முழுவதும் காதல் ஜோடிகள் அன்பு மழை பொழிந்து காணப்பட்டது. காதலர்கள் சந்தோ‌ஷத்தில் மிதந்து காணப்பட்டனர்.

    காதலர் தினம் கொண்டாட்டம் குறித்து ஒரு காதல் ஜோடி கூறியதாவது:-

    பிப்ரவரி 14-ந்தேதி காதலர் தினம் என்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமான தினமாக உள்ளது. எங்களது காதல் அன்பை வெளிப்படுத்தும் நாளாக அது அமைந்துள்ளது. காதலர்கள் பரிசு பொருட்கள் வழங்கி அன்பு மழையில் நனைவது வாழ்வில் மிகவும் மறக்க முடியாத நாளாகும்.

    காதல் ஓர் உன்னதமான அன்பை வெளிப்படுத்துவது ஆகும். ஒவ்வொரு காதல் ஜோடிக்கும் பிப்ரவரி 14-ந்தேதி வாழ்வில் ஓர் உன்னதமான நாளாக அமைந்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.  #valentineday #tamilnews
     
    Next Story
    ×