என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மேட்டுப்பாளையத்தில் மனைவியுடன் தகராறில் பெயிண்டர் விஷம் குடித்து தற்கொலை
புதுச்சேரி:
புதுவை மேட்டுப்பாளையம் அருகே காந்தி திருநல்லூர் காந்திவீதியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது31),பெயிண்டர். இவரது மனைவி கவுரி. இவர்களது மகன் கேவல்நாத்தை பள்ளியில் சுற்றுலாவுக்கு அழைத்து செல்ல இருந்தனர். இதையடுத்து மாணிக்கத்திடம் கேவல்நாத் பணம் கேட்டான். அப்போது தன்னிடம் பணம் இல்லாததால் மாணிக்கம் தனது தாய் தனலட்சுமியிடம் பணம் கேட்டார்.
இந்த விவரம் கவுரிக்கு தெரிய வந்ததும் அவர் கணவரை கண்டித்து எப்படி தாயிடம் பணம் கேட்கலாம் என்று கேட்டு தகராறு செய்தார். இதனால் மனமுடைந்த மாணிக்கம் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறினார்.
வெகுநேரமாகியும் மாணிக்கம் வீடு திரும்பாததால் அவரது தம்பி துரைநாத் பல இடங்களில் சென்று தேடினார். நேற்று காலை மேட்டுப்பாளையத்தில் ஒரு காலி மனையில் மாணிக்கம் மயங்கி கிடப்பதாகவும் அருகில் விஷபாட்டில் இருப்பதாகவும் துரைநாத்துக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து துரைநாத் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணிக்கத்தை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாணிக்கம் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இனியன், ஏட்டு சக்திமுருகன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்