search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமங்கலம் அருகே கல்லூரி மாணவி- இளம்பெண் தற்கொலை
    X

    திருமங்கலம் அருகே கல்லூரி மாணவி- இளம்பெண் தற்கொலை

    திருமங்கலம் அருகே கல்லூரி மாணவி மற்றும் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பேரையூர்:

    திருமங்கலம் அருகே கள்ளிக்குடி பகுதியில் உள்ள குபேரன் நகரைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகள் முத்துமாரி (வயது 18). இவர் மதுரையில் உள்ள கல்லூரியில் பி.ஏ., 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முத்து மாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளிக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    முத்துமாரி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம் அருகே உள்ள செங்குளத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் மகாலட்சுமி (19). கடந்த சில மாதங்களாக இவருக்கு வயிற்று வலி இருந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் விரக்தி அடைந்த மகாலட்சுமி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    Next Story
    ×