என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
புதுவையில் கடன் தொல்லையால் 2 பேர் தற்கொலை
புதுச்சேரி:
புதுவை சண்முகாபுரம் நிலைய வீதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு, பெயிண்டர். இவரது மனைவி ஈஸ்வரி (வயது39). 2 மகள்கள் உள்ளனர். ஒரு மகளுக்கு திருமணமாகி விட்டது. ஒரு மகள் கல்லூரியில் படித்து வருகிறார். ஈஸ்வரி சுயஉதவிக்குழு தலைவியாக இருந்தார். இவர் குழு உறுப்பினர்களின் பணத்தை வங்கியில் செலுத்தாமல் குடும்ப செலவுக்கு பயன்படுத்தி வந்தார். இந்த விவரம் வெளியே தெரியவந்தால் அவமானமாகி விடுமே என ஈஸ்வரி மனமுடைந்தார்.
நேற்று காலை கணவர் திருநாவுக்கரசு வேலைக்கு சென்ற நிலையில், மகளும் கல்லூரிக்கு சென்ற பின்னர் மின்விசிறி கொக்கியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இனியன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் நாகேஸ்வரராவ ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுவை திலாஸ்பேட்டை மருதம்நகர் சூர்யகாந்தி தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது42). இவர் பெரிய மார்க்கெட்டில் மொத்த காய்கறி வியாபாரி ஒருவரிடம் கணக்காளராக வேலைபார்த்து வந்தார். இவர் பலரிடம் பணம் கடன் வாங்கினார். ஆனால் அந்த பணத்தை திருப்பி கொடுக்காததால் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு முருகனுக்கு நெருக்கடி கொடுத்தனர். இதன் காரணமாக முருகன் கடந்த 3 நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.
இந்த நிலையில் கடன் தொல்லையால் மனமுடைந்த முருகன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று அ திகாலை வீட்டின் சமையல் அறையில் மின்விசிறி கொக்கியில் நைலான் கயிற்றால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில் கோரிமடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்