search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் கடன் தொல்லையால் 2 பேர் தற்கொலை
    X

    புதுவையில் கடன் தொல்லையால் 2 பேர் தற்கொலை

    புதுவையில் கடன் தொல்லையால் 2 பேர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை சண்முகாபுரம் நிலைய வீதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு, பெயிண்டர். இவரது மனைவி ஈஸ்வரி (வயது39). 2 மகள்கள் உள்ளனர். ஒரு மகளுக்கு திருமணமாகி விட்டது. ஒரு மகள் கல்லூரியில் படித்து வருகிறார். ஈஸ்வரி சுயஉதவிக்குழு தலைவியாக இருந்தார். இவர் குழு உறுப்பினர்களின் பணத்தை வங்கியில் செலுத்தாமல் குடும்ப செலவுக்கு பயன்படுத்தி வந்தார். இந்த விவரம் வெளியே தெரியவந்தால் அவமானமாகி விடுமே என ஈஸ்வரி மனமுடைந்தார்.

    நேற்று காலை கணவர் திருநாவுக்கரசு வேலைக்கு சென்ற நிலையில், மகளும் கல்லூரிக்கு சென்ற பின்னர் மின்விசிறி கொக்கியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இனியன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் நாகேஸ்வரராவ ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுவை திலாஸ்பேட்டை மருதம்நகர் சூர்யகாந்தி தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது42). இவர் பெரிய மார்க்கெட்டில் மொத்த காய்கறி வியாபாரி ஒருவரிடம் கணக்காளராக வேலைபார்த்து வந்தார். இவர் பலரிடம் பணம் கடன் வாங்கினார். ஆனால் அந்த பணத்தை திருப்பி கொடுக்காததால் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு முருகனுக்கு நெருக்கடி கொடுத்தனர். இதன் காரணமாக முருகன் கடந்த 3 நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

    இந்த நிலையில் கடன் தொல்லையால் மனமுடைந்த முருகன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று அ திகாலை வீட்டின் சமையல் அறையில் மின்விசிறி கொக்கியில் நைலான் கயிற்றால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின்பேரில் கோரிமடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

    Next Story
    ×