search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் பல்கலைக்கழக ஊழியர் தற்கொலை
    X

    புதுவையில் பல்கலைக்கழக ஊழியர் தற்கொலை

    காட்டு கொட்டகையில் பல்கலைக்கழக ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேதராப்பட்டு:

    புதுவை சின்னகாலாப்பட்டு ஈ.சி.ஆர். சாலையை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 37). இவர் புதுவை பல்கலைக்கழகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு பொற்கிளி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    குடும்ப தகராறு காரணமாக கதிர்வேல் கடந்த ஒரு வாரமாக வீட்டுக்கு வரவில்லை. இவருக்கு காலாப்பட்டு திடீர் நகரில் காட்டு பகுதியில் நிலம் உள்ளது. அங்கு சிமெண்டு தகடு கூரையினால் சிறு கொட்டகை ஒன்று அமைத்திருந்தார். இரவில் அவர் அங்கு சென்று தங்கியதாக தெரிகிறது.

    இந்த நிலையில் அவர் அந்த கொட்டகையில் பிணமாக தொங்கினார். நைலான் கயிற்றால் அவர் தூக்குமாட்டி தற்கொலை செய்தது தெரிந்தது.

    இதுபற்றி காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

    Next Story
    ×