search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கே.கே.நகர் அருகே வாலிபர் படுகொலை
    X

    கே.கே.நகர் அருகே வாலிபர் படுகொலை

    கே.கே.நகர் அருகே வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    கே.கே.நகர் அண்ணா மெயின் ரோட்டில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் அருகில் இன்று காலை தலை நசுங்கிய நிலையில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார்.

    பேண்ட், சர்ட் அணிந்திருந்த அவரது உடல் அருகில் ரத்தக்கறை படிந்த கல் ஒன்று காணப்பட்டது. நேற்று இரவு மர்மநபர்கள் யாரோ, வாலிபரின் தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் கே.கே.நகர் போலீசார் விரைந்து சென்று கொலையுண்ட வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? என்பது பற்றி விசாரணை நடத்தினர்.

    அப்போது கொலை செய்யப்பட்ட வாலிபரின் பெயர் அழுக்கு குமார் என்கிற ஜெயக்குமார் (45) என்பது தெரியவந்தது.

    அந்த பகுதியில் குப்பை பொறுக்கும் பணியில் ஈடுபட்டு வந்த இவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவில்லை. கொலையாளிகளை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    கொலை நடந்த இடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் எதுவும் பொறுத்தப்பட்டுள்ளதா? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். முன்விரோதம் காரணமாக குமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    Next Story
    ×